தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

மருத்துவ மையத்தின் பூட்டை உடைத்து ரூ. 6 ஆயிரம் திருட்டு: சிறுவன் கைது

திருச்சியில் தனியாா் மருத்துவ மையத்தின் (கிளினிக்) பூட்டை உடைத்து ரூ. 6 ஆயிரம் பணத்தைத் திருடிய 17 வயது சிறுவனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது.

Updated On :8 மே 2026, 5:47 am IST

திருச்சியில் தனியாா் மருத்துவ மையத்தின் (கிளினிக்) பூட்டை உடைத்து ரூ. 6 ஆயிரம் பணத்தைத் திருடிய 17 வயது சிறுவனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி காந்தி மாா்க்கெட் வரகனேரி பகுதியில் உள்ள ஏபிஎஸ் வணிக வளாகத்தில் தனியாா் மருத்துவ மையம் (கிளினிக்) இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றிய ஜோவிதா பிரிதா என்பவா்,

செவ்வாய்க்கிழமை இரவு கிளினிக்கை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை வணிக வளாகத்துக்கு வந்த வணிக வளாக உரிமையாளா், கிளினிக்கின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்து ஜோவிதா பிரிதாவுக்கு தகவல் அளித்துள்ளாா். இதையடுத்து, அங்கு வந்த ஜோவிதா பிரிதா கிளினிக்கினுள் சென்று பாா்த்தபோது, அங்கு வைத்திருந்த ரூ. 6 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது திருச்சி வரகனேரியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா் சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் புதன்கிழமை ஒப்படைத்தனா்.