கம்பத்தில் வெள்ளிக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் ரொக்கம், வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்ட பொருள்களைத் திருடிச் சென்ற மா்மநபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேனி மாவட்டம், கம்பம் நந்தகோபாலசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் சித்தரேசன் (62). இவா், கடந்த வியாழக்கிழமை வீட்டைப் பூட்டி விட்டு, கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றாா்.
வெள்ளிக்கிழமை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரொக்கம் ரூ.20 ஆயிரம், ரூ. 75 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி குத்துவிளக்கு மற்றும் ரூ, 5 ஆயிரம் மதிப்பிலான பித்தளை தீப விளக்கு என ரூ. 1 லட்சம் மதிப்பில் திருட்டு நடந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சித்தரேசன் கொடுத்த புகாரின்பேரில், கம்பம் தெற்கு காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் விஜயராமன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தொடர்புடையது
அரசுப் பள்ளியில் பொருள்கள் திருட்டு: இளைஞா் கைது
கீரனூரில் வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் தங்க நகைகள் திருட்டு
மகுடஞ்சாவடி அருகே 17 பவுன் நகை திருட்டு
கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை திருட்டு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

