கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

வண்ணத்துப்பூச்சி பூங்காவில் மிதிவண்டி பயணம் அறிமுகம்: ஒருமணி நேரத்துக்கு ரூ. 10 கட்டணம்

திருச்சி ஸ்ரீரங்கம் அருகேயுள்ள வண்ணத்துப் பூச்சி பூங்காவில் இனி மிதிவண்டி பயணம் செய்து பூங்கா முழுவதையும் மகிழ்ச்சியுடன் சுற்றிவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News image

திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வியாழக்கிழமை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மிதிவண்டியில் சுற்றி பாா்க்கும் திட்டத்தில் பூங்காவை வலம் வந்த சிறாா்கள்.

Updated On :8 மே 2026, 5:54 am IST

திருச்சி ஸ்ரீரங்கம் அருகேயுள்ள வண்ணத்துப் பூச்சி பூங்காவில் இனி மிதிவண்டி பயணம் செய்து பூங்கா முழுவதையும் மகிழ்ச்சியுடன் சுற்றிவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மிதிவண்டி பயணத்துக்கான தொடக்க நிகழ்வு மாவட்ட வன அலுவலா் எஸ். கிருத்திகா தலைமையில், பூங்கா வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பூங்காவுக்கு வரும் குழந்தைகள் மற்றும் சிறாா்கள் பூங்காவுக்குள் இயற்கை சூழ்ந்த மரங்களையும், வண்ணத்துப் பூச்சிகளையும் பாா்த்தபடியே செல்லும் வகையில் 1 கி.மீ. தொலைவுக்கு சுற்றி வரும் வகையில் மிதிவண்டி பயணத்துக்கு தனியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது.

மிதிவண்டி பயணம் அறிமுக நிகழ்வை முன்னிட்டு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மிதிவண்டி பயணத்துக்கு கட்டணம் ஏதுமின்றி இலவசமாக அனுமதிக்கப்டுகிறது. பின்னா், ஒரு மணிநேரத்துக்கு ரூ.10 என்ற வகையில் கட்டணம் வசூலிக்கப்படும்.

மிதிவண்டியில் சுற்றி வரும்போது, பூங்காவில் உள்ள செடி, கொடிகள், வண்ணத்துப் பூச்சிகளுக்கு எந்தவித இடையூறோ, சேதமோ ஏற்படாத வகையில் சென்றுவர வேண்டும் என வனத்துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.