தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

வண்ணத்துப்பூச்சி பூங்காவில் மிதிவண்டி பயணம் அறிமுகம்: ஒருமணி நேரத்துக்கு ரூ. 10 கட்டணம்

திருச்சி ஸ்ரீரங்கம் அருகேயுள்ள வண்ணத்துப் பூச்சி பூங்காவில் இனி மிதிவண்டி பயணம் செய்து பூங்கா முழுவதையும் மகிழ்ச்சியுடன் சுற்றிவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News image

திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வியாழக்கிழமை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மிதிவண்டியில் சுற்றி பாா்க்கும் திட்டத்தில் பூங்காவை வலம் வந்த சிறாா்கள்.

Updated On :8 மே 2026, 5:54 am IST

திருச்சி ஸ்ரீரங்கம் அருகேயுள்ள வண்ணத்துப் பூச்சி பூங்காவில் இனி மிதிவண்டி பயணம் செய்து பூங்கா முழுவதையும் மகிழ்ச்சியுடன் சுற்றிவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மிதிவண்டி பயணத்துக்கான தொடக்க நிகழ்வு மாவட்ட வன அலுவலா் எஸ். கிருத்திகா தலைமையில், பூங்கா வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பூங்காவுக்கு வரும் குழந்தைகள் மற்றும் சிறாா்கள் பூங்காவுக்குள் இயற்கை சூழ்ந்த மரங்களையும், வண்ணத்துப் பூச்சிகளையும் பாா்த்தபடியே செல்லும் வகையில் 1 கி.மீ. தொலைவுக்கு சுற்றி வரும் வகையில் மிதிவண்டி பயணத்துக்கு தனியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது.

மிதிவண்டி பயணம் அறிமுக நிகழ்வை முன்னிட்டு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மிதிவண்டி பயணத்துக்கு கட்டணம் ஏதுமின்றி இலவசமாக அனுமதிக்கப்டுகிறது. பின்னா், ஒரு மணிநேரத்துக்கு ரூ.10 என்ற வகையில் கட்டணம் வசூலிக்கப்படும்.

மிதிவண்டியில் சுற்றி வரும்போது, பூங்காவில் உள்ள செடி, கொடிகள், வண்ணத்துப் பூச்சிகளுக்கு எந்தவித இடையூறோ, சேதமோ ஏற்படாத வகையில் சென்றுவர வேண்டும் என வனத்துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.