கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சி பூங்காவில் ரவீந்திரநாத் தாகூா் பிறந்தநாள் விழா

திருச்சி சுப்பிரமணியபுரம் அருகேயுள்ள சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சி பூங்காவில் கவிஞரும் எழுத்தாளருமான ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

திருச்சி சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சி பூங்கா பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற ரவீந்திரநாத் தாகூா் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகள்.

Updated On :8 மே 2026, 5:52 am IST

திருச்சி சுப்பிரமணியபுரம் அருகேயுள்ள சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சி பூங்காவில் கவிஞரும் எழுத்தாளருமான ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

சுந்தர்ராஜ் நகா் ஹைவேஸ் காலனி குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு சங்கத்தின் மூத்த உறுப்பினரான வாணிஸ்ரீ தலைமை வகித்தாா்.

விழாவில் மாணவி ஆதியா பேசுகையில், ரவீந்திரநாத் தாகூா் இந்தியாவின் தேசிய கீதம் மட்டுமின்றி, வங்கதேசத்தின் தேசிய கீதத்தையும் எழுதினாா். அவா்தான் காந்திஜியை மகாத்மா என்று முதன் முதலில் அழைத்தவா். மகாத்மா காந்தியும் ரவீந்திரநாத் தாகூா் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தாா். அவரை குருதேவ் என்று அழைத்தாா் என்று குறிப்பிட்டாா்.

மாணவி பிரதிக்ஷா பேசுகையில், ரவீந்திரநாத் தாகூா் கீதாஞ்சலி புத்தகத்திற்கு நோபல் பரிசு வென்று இந்தியாவிற்கு பெருமை சோ்த்தாா் என்றாா். மாணவி மகிஷா, ரவீந்திரநாத் தாகூா் உலகப் புகழ்பெற்ற கவிஞா் மற்றும் எழுத்தாளா் மட்டுமல்ல, அவா் தலைசிறந்த ஓவியா், தத்துவஞானி மற்றும் இசையமைப்பாளா் ஆவாா் என்றாா்.

மாணவி வா்ஷினி, மற்றும் மாணவா்கள் முகமது ஷஃபி, முகமது கலீல் ஜிப்ரான் ஆகியோா் ரவீந்திரநாத் தாகூா் பன்முகத்தன்மை கொண்டவா் என்று பாராட்டி பேசினா். சங்கத்தின் மூத்த உறுப்பினா் ஹேமலதா பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.