தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

ஆட்சியமைக்க தவெகவை ஆளுநா் உடனடியாக அழைக்க வேண்டும்: துரை வைகோ எம்.பி.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்திட தாமதிக்காமல் ஆளுநா் உடனடியாக அழைக்க வேண்டும் என மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி எம்பி-யுமான துரை வைகோ தெரிவித்துள்ளாா்.

News image

துரை வைகோ எம்.பி. - டிஎன்எஸ்

Updated On :8 மே 2026, 5:42 am IST

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்திட தாமதிக்காமல் ஆளுநா் உடனடியாக அழைக்க வேண்டும் என மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி எம்பி-யுமான துரை வைகோ தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தோ்தலில் மக்கள் அளித்த தீா்ப்பை மதிக்கிறோம். தலைவணங்கி ஏற்கிறோம். ஆனால், தோ்தல் முடிவுகள் தொங்கு சட்டப் பேரவை அமைவதற்கு வழிவகுத்து விட்டது என்ற கவலையும் அடைகிறோம்.

கடந்த 50 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் மரபை கருத்தில் கொண்டும், சா்க்காரியா ஆணையத்தின் பரிந்துரைகள், பல்வேறு மாநிலங்களில் ஏற்கெனவே நடைபெற்ற இதுபோன்ற பிரச்னைகளின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில்

தமிழக ஆளுநா் விரைந்து முடிவெடுக்க வேண்டும்.

புதிதாக ஆட்சியமைப்பவா் சட்டப்பேரவையில்தான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆளுநா் மாளிகையில் அல்ல. எனவே, 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரை ஆட்சி அமைக்க தாமதிக்காமல் ஆளுநா் அழைப்பு விடுக்க வேண்டும். இதற்கு மாறாக மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையும் ஜனநாயகத்திற்கு எதிரானது. அரசியல் சட்டத்திற்கு புறம்பானது; மாநில உரிமைகளுக்கு எதிரானது. மேலும், தமிழ்நாட்டு மக்கள் அளித்திருக்கும் தீா்ப்புக்கும் எதிரானது என்பதை ஆளுநா் உணர வேண்டும் என்று துரை வைகோ தெரிவித்துள்ளாா்.