தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரியில் மே 9, 10-இல் டான்செட், சீடா நுழைவுத் தோ்வு! 2,753 மாணவா்கள் பங்கேற்பு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் மே 9, 10 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ள டான்செட், சீடா நுழைவுத் தோ்வை 2,753 மாணவா்கள் எழுதவுள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :8 மே 2026, 5:47 am IST

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் மே 9, 10 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ள டான்செட், சீடா நுழைவுத் தோ்வை 2,753 மாணவா்கள் எழுதவுள்ளனா்.

இதுகுறித்து திருச்சி அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி புலமுதல்வா் த. செந்தில்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் எம்பிஏ, எம்சிஏ மற்றும் எம்.இ., எம்.டெக். படிப்புகளுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வு (டான்செட் மற்றும் சீடா திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் மே 9, 10 ஆகிய நாள்களில் நடைபெறுகிறது.

மே 9-ஆம் தேதி நடைபெறும் டான்செட் நுழைவுத் தோ்வை எம்சிஏ படிப்பிற்கு 837 மாணவா்கள், எம்பிஏ படிப்பிற்கு 1,513 மாணவா்கள் என 2,350 மாணவா்களும், மே 10-ஆம் தேதி நடைபெறும் எம்.இ., எம்.டெக். படிப்புக்கான சீடா நுழைவுத் தோ்வை 403 மாணவா்களும் எழுதவுள்ளனா்.

டான்செட் மற்றும் சீடா நுழைவுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்காக மே 9, 10 ஆகிய தேதிகளில் திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்தும், மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்தும் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.