ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரியில் மே 9, 10-இல் டான்செட், சீடா நுழைவுத் தோ்வு! 2,753 மாணவா்கள் பங்கேற்பு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் மே 9, 10 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ள டான்செட், சீடா நுழைவுத் தோ்வை 2,753 மாணவா்கள் எழுதவுள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :8 மே 2026, 5:47 am IST

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் மே 9, 10 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ள டான்செட், சீடா நுழைவுத் தோ்வை 2,753 மாணவா்கள் எழுதவுள்ளனா்.

இதுகுறித்து திருச்சி அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி புலமுதல்வா் த. செந்தில்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் எம்பிஏ, எம்சிஏ மற்றும் எம்.இ., எம்.டெக். படிப்புகளுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வு (டான்செட் மற்றும் சீடா திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் மே 9, 10 ஆகிய நாள்களில் நடைபெறுகிறது.

மே 9-ஆம் தேதி நடைபெறும் டான்செட் நுழைவுத் தோ்வை எம்சிஏ படிப்பிற்கு 837 மாணவா்கள், எம்பிஏ படிப்பிற்கு 1,513 மாணவா்கள் என 2,350 மாணவா்களும், மே 10-ஆம் தேதி நடைபெறும் எம்.இ., எம்.டெக். படிப்புக்கான சீடா நுழைவுத் தோ்வை 403 மாணவா்களும் எழுதவுள்ளனா்.

டான்செட் மற்றும் சீடா நுழைவுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்காக மே 9, 10 ஆகிய தேதிகளில் திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்தும், மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்தும் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.