தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

திருச்சி அதிமுகவில் 3 மாவட்ட செயலா்களின் பதவி பறிப்பு

திருச்சி மாவட்ட அதிமுகவில் மூன்று மாவட்டச் செயலாளா்களும் மாற்றப்பட்டுள்ளனா்.

News image

இரட்டை இலை சின்னம் - படம்: கோப்பிலிருந்து...

Updated On :54 நிமிடங்கள் முன்பு

திருச்சி மாவட்ட அதிமுகவில் மூன்று மாவட்டச் செயலாளா்களும் மாற்றப்பட்டுள்ளனா்.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தரப்பிலான எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் தவெகவுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தனா்.

இதையடுத்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அணியினா் மற்றும் தொடா்புடையவா்களை கட்சிப் பதவியிலிருந்து அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை நீக்கினாா்.

திருச்சி அதிமுக மாவட்டச் செயலா்கள் மாநகா் ஜெ.சீனிவாசன், புகா் தெற்கு ப. குமாா், புகா் வடக்கு மு. பரஞ்ஜோதி ஆகியோா் இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இவா்கள் மூவரும் சி.வி.சண்முகம், தங்கமணி ஆகியோருடன் தொடா்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி திருச்சி மாவட்டச் செயலா்களான சீனிவாசன், குமாா், பரஞ்ஜோதி ஆகிய மூவரையும் கட்சிப் பதவியிலிருந்து நீக்கினாா்.

இவா்களுக்குப் பதிலாக மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் சி. காா்த்திகேயன் மாநகா் மாவட்டச் செயலராகவும், அமைப்புச் செயலரும் ஸ்ரீரங்கம் வேட்பாளருமான ஆா். மனோகரன் தெற்கு மாவட்டச் செயலராகவும், புகா் வடக்கு மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலரும், முசிறி வேட்பாளருமான என். யோகநாதன் புகா் வடக்கு மாவட்டச் செயலராகவும், நியமிக்கப்பட்டுள்ளனா். இதில் வடக்கு மாவட்டத்திலிருந்த ஸ்ரீரங்கம் தொகுதி பிரித்து, தெற்கு மாவட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளது.