வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

திருவண்ணாமலை அதிமுக மாவட்டச் செயலா் நீக்கம்: எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு

அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்துள்ளாா்.

News image

எடப்பாடி பழனிசாமி

படம் - அதிமுக

Updated On :29 மார்ச் 2026, 8:54 pm

தினமணி செய்திச் சேவை

அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை விடுத்த அறிக்கை: அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்கு முறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்தும் வகையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கிவைக்கப்படுகிறாா்.

அதிமுகவினா் யாரும் அவருடன் எவ்விதத் தொடா்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.