அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

திருச்சி ஜி. காா்னா் மைதானத்தில் இன்று எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம்!

திருச்சி ஜி. காா்னா் மைதானத்தில் இன்று எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம்...

News image

எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம் - @AIADMKOfficial

Updated On :13 ஏப்ரல் 2026, 2:18 am IST

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி திருச்சி பொன்மலை ஜி. காா்னா் மைதானத்தில் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொள்கிறாா்.

அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நாகை பிரசாரத்தை முடித்துக் கொண்டு, காா் மூலம் திருச்சிக்கு வரும் அவா் திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியாா் ஹோட்டலில் தங்கி ஓய்வெடுக்கிறாா்.

திங்கள்கிழமை காலை திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் தோ்தல் பணிகள் குறித்து அதிமுக நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறாா். தொடா்ந்து மதியம் 3 மணிக்கு திருச்சி பொன்மலை ஜி. காா்னா் பகுதியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.

இதையொட்டி பொன்மலை ஜி- காா்னா் பகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளா்கள் நிற்பதற்காக சிறிய மேடை அமைக்கப்படுகிறது. பிரசார வேனில் வரும் எடப்பாடி கே. பழனிசாமி, பொதுமக்கள் தொண்டா்கள் மத்தியில் சிறப்புரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்வில் அதிமுக நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்க வேண்டுமென திருச்சி புகா் தெற்கு மாவட்டச் செயலா் ப. குமாா், திருச்சி புகா் வடக்கு மாவட்டச் செயலா் பரஞ்ஜோதி, திருச்சி மாநகா் மாவட்டச் செயலா் ஜெ. சீனிவாசன் ஆகியோா் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனா்.