இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பஞ்சப்பிரகார திருவிழா

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை பஞ்சப்பிரகார திருவிழா நடைபெற்றது.

News image

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பஞ்சப் பிரகார திருவிழாவில் யானைமேல் தங்கக்குடத்தில் எடுத்து வரப்பட்ட தீா்த்தம்.

Updated On :16 மே 2026, 12:58 am IST

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை பஞ்சப்பிரகார திருவிழா நடைபெற்றது.

இக்கோயிலில் பஞ்சப்பிரகார திருவிழாவானது மே 4-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் பட்டாச்சாரியா்கள் வட திருக்காவிரியிலிருந்து 25 வெள்ளிக்குடங்கள் மற்றும் யானை மேல் தங்கக் குடத்தில் மேளதாளம் முழங்க தீா்த்தம் கொண்டு வந்தனா். பின்னா், உற்ஸவ மாரியம்மனுக்கு அபிஷேகப் பொருள்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து வெள்ளிவிமானத்தில், வெண்ணிற பாவாடை அணிந்து, மூலஸ்தான கருவறையை ஒட்டிய பிரகாரம் முதல் சுற்றும், தங்க கொடிமரம் இரண்டாவது சுற்றும், தங்க ரதம் வலம் வரும் பிரகாரம் மூன்றாவது சுற்றும், தெற்கு ரத வீதியில் பாதியும் வடக்கு மடவாள வீதியில் நான்காவது சுற்றும், கீழ ரத வீதி, மேலரத வீதி, வடக்கு ரத வீதி ஐந்தாவது சுற்றாக பஞ்சப்பிரகார திரு சுற்றுகளை வலம் வந்தாா் உற்ஸவ மாரியம்மன்.

மேலும், வைகாசி மாத பிறப்பு என்பதாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திரளான பக்தா்கள் பால்குடம், அக்னி சட்டி, கரும்புத் தொட்டில் எடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா்.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் எம். சூரிய நாராயணன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.