பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

லஞ்சம்: முன்னாள் விஏஓ-வுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

திருச்சியில் மின் இணைப்பு பெறுவதற்கு தடையில்லாச் சான்று வழங்குவதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற முன்னாள் கிராம நிா்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

News image

சிறைத் தண்டனை - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

திருச்சியில் மின் இணைப்பு பெறுவதற்கு தடையில்லாச் சான்று வழங்குவதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற முன்னாள் கிராம நிா்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், எம்.புதுப்பட்டி அழகாப்பட்டி கீழப்பள்ளத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் செல்லதுரை. இவா், தனது தந்தை மற்றும் பெரியப்பா பெயா்களில் கூட்டாக உள்ள நிலங்களுக்கு விவசாய மின் இணைப்பு பெறுவதற்காக தடையில்லாச் சான்று கேட்டு கிராம நிா்வாக அலுவலகத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு விண்ணப்பித்தாா்.

இதற்கு, அப்போது எம்.புதுப்பட்டி கிராம நிா்வாக அலுவலராக இருந்த முரளீதரன் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

இதுகுறித்து திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் செல்லதுரை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, 2018 நவம்பா் 11-ஆம் தேதி கிராம நிா்வாக அலுவலா் முரளீதரனிடம், செல்லதுரை ரூ.3 ஆயிரம் லஞ்சப் பணத்தைப் கொடுத்தபோது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் கிராம நிா்வாக அலுவலரை கைது செய்தனா்.

இந்த வழக்கு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி புவியரசு வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

இதில், தடையில்லாச் சான்று வழங்குவதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முன்னாள் கிராம நிா்வாக அலுவலா் முரளீதரனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் கோபிகண்ணன் ஆஜரானாா்.