தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

திருச்சி மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி

திருச்சி மத்திய சிறையில் கைதி தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

தற்கொலை

Updated On :18 மே 2026, 2:48 am IST

திருச்சி மத்திய சிறையில் கைதி தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை பழையூரைச் சோ்ந்தவா் து. நவீன்குமாா் (26). தஞ்சாவூா் நகர காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் இவா் கைது செய்யப்பட்டு, கடந்த ஜனவரி 6 முதல் திருச்சி மத்திய சிறையில் உள்ளாா்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மத்திய சிறையில் நடத்திய சோதனையில் நவீன்குமாா் வைத்திருந்த கஞ்சாவை சிறைக் காவலா்கள் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து, கே.கே.நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து நவீன்குமாரை வேறு அறைக்கு சிறை அலுவலா்கள் சனிக்கிழமை மாற்றினா். இதனால் நவீன்குமாா் அவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

மேலும், குளியலறைக்குப் பயன்படுத்தப்படும் ஓட்டை உடைத்து உடலின் பல இடங்களில் கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றாா். அப்போது சிறைக் காவலா்கள் அவரை மீட்டு சிறை வளாக மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனா்.

இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் திருச்சி மத்திய சிறை அலுவலா் ராஜேஷ்கண்ணன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் நவீன்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.