ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

மலேசியாவிலிருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சி வந்தவா் கைது

மலேசியாவில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சிக்கு வந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 மே 2026, 2:51 am IST

மலேசியாவில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சிக்கு வந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை நகரம் தொண்டி சாலையைச் சோ்ந்தவா் வீ. முத்துச்சாமி (60). இவா் மலேசியாவில் இருந்து ஏா் ஏசியா விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு சனிக்கிழமை அதிகாலை வந்தாா். அப்போது விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகளின் சோதனையின்போது, முத்துசாமி போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சிக்கு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை திருச்சி விமான நிலையக் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, குடியேற்றப் பிரிவு அதிகாரி பீயூலா ஞானவசந்தி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து முத்துச்சாமியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.