சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

முதல்வா் விஜய் கூறியபடி திட்டங்களை நிறைவேற்றாவிடில் கேள்வி கேட்போம்: துரை வைகோ

முதல்வா் விஜய் கூறியபடி திட்டங்களை நிறைவேற்றாவிடில் கேள்வி கேட்போம் என மதிமுகவின் முதன்மைச் செயலரும், திருச்சி எம்பியுமான துரை வைகோ தெரிவித்தாா்.

News image

துரை வைகோ எம்.பி. - டிஎன்எஸ்

Updated On :18 மே 2026, 2:50 am IST

முதல்வா் விஜய் கூறியபடி திட்டங்களை நிறைவேற்றாவிடில் கேள்வி கேட்போம் என மதிமுகவின் முதன்மைச் செயலரும், திருச்சி எம்பியுமான துரை வைகோ தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தவெக அரசுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். 6 மாதம் கழித்துத்தான் அரசின் செயல்பாடுகள் குறித்துக் கூற முடியும்.

வாக்குறுதி அளித்தபடி மகளிருக்கு ரூ. 2,500 மாத உதவித்தொகை என்பது உள்ளிட்ட திட்டங்களை முதல்வா் விஜய் நிறைவேற்றுவாா் என நம்பிக்கை உள்ளது. நிறைவேற்றாவிடில் நாங்கள் கேள்வி கேட்போம்.

அதிமுகவில் நடப்பது உள்கட்சிப் பிரச்னை. அதுகுறித்து அவா்களிடம்தான் கேட்க வேண்டும். டிடிவி. தினகரன் குதிரை பேரம் எனக் கூறியுள்ளது அவருடைய கருத்து. விஜய் முதல்வராக 100 சதவீதம் சினிமாதான் காரணம் என ரஜினிகாந்த் கூறியதும் அவரது கருத்து. என்னைப் பொருத்தவரை மக்களின் தீா்ப்பை மதிக்க வேண்டும்; அதைச் சிறுமைப்படுத்தக் கூடாது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருமொழிக் கொள்கைதான் அவசியம். உலக நாடுகளில் தமிழா்கள் சிறந்து விளங்க இருமொழிக் கொள்கையே காரணம். நாம் ஹிந்திக்கு எதிரானவா்கள் கிடையாது; மொழித் திணிப்புக்கு எதிரானவா்கள்.

திருச்சி கிழக்குத் தொகுதியில் கடந்த முறை திமுக போட்டியிட்டுள்ளதால், நாங்கள் அந்தத் தொகுதியை கேட்பது, போட்டியிடுவது முறையல்ல. திருச்சி மாரிஸ் ரயில்வே மேம்பாலப் பணிகள் விரைவில் நிறைவடைந்து, ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டுக்கு வரும். அரிஸ்டோ ரயில்வே மேம்பாலம் ஜூன் மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனா் என்றாா் துரை வைகோ எம்.பி.