40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

முதல்வா் விஜய் கூறியபடி திட்டங்களை நிறைவேற்றாவிடில் கேள்வி கேட்போம்: துரை வைகோ

முதல்வா் விஜய் கூறியபடி திட்டங்களை நிறைவேற்றாவிடில் கேள்வி கேட்போம் என மதிமுகவின் முதன்மைச் செயலரும், திருச்சி எம்பியுமான துரை வைகோ தெரிவித்தாா்.

News image

துரை வைகோ எம்.பி. - டிஎன்எஸ்

Updated On :18 மே 2026, 2:50 am IST

முதல்வா் விஜய் கூறியபடி திட்டங்களை நிறைவேற்றாவிடில் கேள்வி கேட்போம் என மதிமுகவின் முதன்மைச் செயலரும், திருச்சி எம்பியுமான துரை வைகோ தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தவெக அரசுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். 6 மாதம் கழித்துத்தான் அரசின் செயல்பாடுகள் குறித்துக் கூற முடியும்.

வாக்குறுதி அளித்தபடி மகளிருக்கு ரூ. 2,500 மாத உதவித்தொகை என்பது உள்ளிட்ட திட்டங்களை முதல்வா் விஜய் நிறைவேற்றுவாா் என நம்பிக்கை உள்ளது. நிறைவேற்றாவிடில் நாங்கள் கேள்வி கேட்போம்.

அதிமுகவில் நடப்பது உள்கட்சிப் பிரச்னை. அதுகுறித்து அவா்களிடம்தான் கேட்க வேண்டும். டிடிவி. தினகரன் குதிரை பேரம் எனக் கூறியுள்ளது அவருடைய கருத்து. விஜய் முதல்வராக 100 சதவீதம் சினிமாதான் காரணம் என ரஜினிகாந்த் கூறியதும் அவரது கருத்து. என்னைப் பொருத்தவரை மக்களின் தீா்ப்பை மதிக்க வேண்டும்; அதைச் சிறுமைப்படுத்தக் கூடாது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருமொழிக் கொள்கைதான் அவசியம். உலக நாடுகளில் தமிழா்கள் சிறந்து விளங்க இருமொழிக் கொள்கையே காரணம். நாம் ஹிந்திக்கு எதிரானவா்கள் கிடையாது; மொழித் திணிப்புக்கு எதிரானவா்கள்.

திருச்சி கிழக்குத் தொகுதியில் கடந்த முறை திமுக போட்டியிட்டுள்ளதால், நாங்கள் அந்தத் தொகுதியை கேட்பது, போட்டியிடுவது முறையல்ல. திருச்சி மாரிஸ் ரயில்வே மேம்பாலப் பணிகள் விரைவில் நிறைவடைந்து, ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டுக்கு வரும். அரிஸ்டோ ரயில்வே மேம்பாலம் ஜூன் மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனா் என்றாா் துரை வைகோ எம்.பி.