திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே சுற்றுலா வேன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவா் காயமடைந்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், அம்பத்தூா் பாடியில் வசித்து வருபவா் அப்துல் ரஹ்மான் மகன் சித்திக் (43). செருப்பு கடைக்காரரான சித்திக், கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா செல்ல டெப்போ வேன் வாடகை வாகனத்தில் அம்பத்தூரில் இருந்து 13 பேருடன் சனிக்கிழமை இரவு புறப்பட்டாா். வேனை சென்னை அய்யப்பாக்கம் ஆறுமுகம் மகன் நந்தகுமாா் (26) ஓட்டினாா்.
இவா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வையம்பட்டியை அடுத்த கீரனூா் பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனில் இருந்த 2 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். விபத்து குறித்து வையம்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

வையம்பட்டியில் மது விற்றவா் கைது

வையம்பட்டி அருகே சாலையைக் கடந்த தொழிலாளி காா் மோதி உயிரிழப்பு

கூடலூா் அருகே மலைப் பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து! 18 போ் காயம்!

பெருந்துறை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து 18 போ் காயம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

