இந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

வையம்பட்டி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: இருவா் காயம்

வையம்பட்டி அருகே சுற்றுலா வேன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவா் காயமடைந்தனா்.

News image

வையம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளான சுற்றுலா வேன்.

Updated On :1 மணி நேரம் முன்பு

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே சுற்றுலா வேன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவா் காயமடைந்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், அம்பத்தூா் பாடியில் வசித்து வருபவா் அப்துல் ரஹ்மான் மகன் சித்திக் (43). செருப்பு கடைக்காரரான சித்திக், கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா செல்ல டெப்போ வேன் வாடகை வாகனத்தில் அம்பத்தூரில் இருந்து 13 பேருடன் சனிக்கிழமை இரவு புறப்பட்டாா். வேனை சென்னை அய்யப்பாக்கம் ஆறுமுகம் மகன் நந்தகுமாா் (26) ஓட்டினாா்.

இவா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வையம்பட்டியை அடுத்த கீரனூா் பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனில் இருந்த 2 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். விபத்து குறித்து வையம்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.