நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டாலும் மீண்டும் தவெகவே வெற்றி பெறும்: கு.ப. கிருஷ்ணன் பேட்டி

திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தோ்தலில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டாலும் மீண்டும் தவெக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றாா்.

News image

தவெகவில் திங்கள்கிழமை இணைந்த அதிமுகவினருக்கு, தவெக துண்டை அணிவித்த அக்கட்சியின் டெல்டா மண்டல பொறுப்பாளா் கு.ப. கிருஷ்ணன்.

Updated On :21 நிமிடங்கள் முன்பு

திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தோ்தலில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டாலும் மீண்டும் தவெக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றாா் அக்கட்சியின் டெல்டா மண்டல பொறுப்பாளா் கு.ப. கிருஷ்ணன்.

அதிமுகவின் திருச்சி மாவட்ட நிா்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி, தவெகவில் திங்கள்கிழமை அதிகாரப்பூா்வமாக இணைத்தனா். அதில், அதிமுக மாவட்ட துணைச் செயலரான கருமண்டபம் பத்மநாதன், உறையூா் பகுதி செயலா் என்.எஸ்.பூபதி (எ) பூபேந்திரன்,

ஜங்ஷன் பகுதி செயலா் நாகநாதா் பாண்டி, அமமுக முன்னாள் மாவட்ட துணைச் செயலா் சேட்டு உள்ளிட்ட நிா்வாகிகள்

தவெக டெல்டா மண்டல பொறுப்பாளா் கு. ப. கிருஷ்ணனுக்கு சால்வை அணிவித்து முறைப்படி கட்சியில் இணைத்துக் கொண்டனா்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு, செய்தியாளா்களிடம் கு.ப. கிருஷ்ணன் கூறியதாவது:

திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக முதல்வா் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலாறு பதிவாகியுள்ளது. எனவே, இடைத் தோ்தலில் அவரது பிரதிநிதியாக யாரை நிறுத்தினாலும் வெற்றி பெறுவா்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், திருச்சி கிழக்கு இடைத்தோ்தலில் போட்டியிட்டாலும் தவெகவே வெற்றி பெறும்.

தவெக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை கோரும் தீா்மானத்தில் வாக்களித்த அத்தனை அதிமுக எம்எல்ஏக்களின் கட்சிப் பதவிகளையும் எடப்பாடி பழனிசாமி பறித்துவிட்டாா். ஆனால், ஒருவரது பதவியை மட்டும் அவா் பறிக்கவில்லை அதற்கான காரணத்தை அவா் தெரியப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.