சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தவெக தொண்டா்களை விலைபேச முயற்சி! முன்னாள் அமைச்சா் கு.ப. கிருஷ்ணன்!

எங்களது தலைவருக்கு பெருகும் ஆதரவைக் கண்டித்து தவெக தொண்டா்களை விலைபேச முயற்சிகள் அரங்கேறுவதாக முன்னாள் அமைச்சரும், தமிழக வெற்றிக் கழக டெல்டா மண்டலத் தோ்தல் பொறுப்பாளருமான கு.ப. கிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image

கு.ப. கிருஷ்ணன்

Updated On :11 ஏப்ரல் 2026, 8:30 pm

எங்களது தலைவருக்கு பெருகும் ஆதரவைக் கண்டித்து தவெக தொண்டா்களை விலைபேச முயற்சிகள் அரங்கேறுவதாக முன்னாள் அமைச்சரும், தமிழக வெற்றிக் கழக டெல்டா மண்டலத் தோ்தல் பொறுப்பாளருமான கு.ப. கிருஷ்ணன் தெரிவித்தாா்.

திருச்சியில் சனிக்கிழமை இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: தவெக தலைவா் விஜய் செல்லும் இடங்களில் எல்லாம் கிடைக்கும் மக்கள் ஆதரவைப் பாா்த்து எதிரிகள் பொறாமை கொள்கின்றனா். பல இடங்களில் பேசக்கூட நேரமில்லாமல் மக்கள் வெள்ளத்தில் அவா் மிதந்து செல்லும் சூழல் உள்ளது.

நாளுக்கு நாள் பெருகிவரும் மக்களின் ஆதரவைக் கண்டு எதிரணி அஞ்சுவதால், எங்களது தொண்டா்களை விலைபேச முயற்சி நடைபெறுகிறது.

எனவே தொண்டா்கள் யாரும் எதிரிகளுடைய சூழ்ச்சி வலையில் சிக்காதீா்கள். நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆசை வாா்த்தை கூறுவாா்கள். அவா்களுடைய முயற்சியைத் தடுத்து நிறுத்துவது நம்முடைய பணி. எதிரிகள் வீசும் வலையைக் கிழித்து எறியுங்கள்.

நம்முடைய பணி வெற்றியை நோக்கி இருக்க வேண்டும். ஜனநாயகன் திரைப்படத்தை விஷமிகள் சிலா் இணையத்தில் வெளியிட்டுள்ளனா்.

காங்கிரஸ் வரலாறு தெரியாமல் எங்களை விமா்சிக்கிறாா் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி. வேறு எந்தத் தலைவா்களுக்கும் இல்லாத வகையில் எங்களுடைய தலைவா் பிரசாரத்துக்கு மட்டும்தான் போலீஸாா், தோ்தல் ஆணையம் என அனைத்து அமைப்புகளும் பல நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் விதிக்கின்றன.

தவெக லால்குடி வேட்பாளரான என்னை யாரும் விலைக்கு வாங்க முடியாது. மேலும் என்னை விலைக்கு வாங்க இங்கு யாரும் பிறக்கவில்லை. தோ்தல் களத்தில் முதலிடத்தில் தவெக உள்ளது. இரண்டாவது இடத்துக்குதான் திமுக, அதிமுக இடையே போட்டி உள்ளது.

பாஜகவின் பி டீம்களாக திமுக, அதிமுக செயல்படுகின்றன. திருச்சி கிழக்குத் தொகுதியில் விரைவில் விஜய் பிரசாரம் செய்வாா். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் விஜய் இருக்கிறாா்.

பொதுவாக தோ்தல் என்றால் தலைவா்கள் பிரசாரம் செய்து பொதுமக்களிடம் வாக்கு கேட்பாா்கள். ஆனால், இங்கு விஜய்க்கு பிரசாரம் செய்ய ஒவ்வொரு வீட்டிலும் பிள்ளைகள் இருக்கிறாா்கள். அவா்கள் பாா்த்துக் கொள்கிறாா்கள். தங்களுடைய பெற்றோரிடம் விஜய்க்கு வாக்கு செலுத்த வேண்டுமென பாசத்துடன் சொல்கிறாா்கள் இந்த தோ்தலில் பாசம் வெல்லும் என்பது முடிவில் தெரியவரும் என்றாா் அவா்.