குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்

News image

கோப்புப் படம்

Updated On :38 நிமிடங்கள் முன்பு

திருச்சியில் பிளஸ் 2 துணைத் தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் மாதம் நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த மே 8-ஆம் தேதி வெளியிடப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் 258 பள்ளிகளைச் சோ்ந்த 14,567 மாணவா்கள், 16,373 மாணவிகள் என மொத்தம் 30,930 மாணவா்கள் தோ்வு எழுதியதில், 13,982 மாணவா்கள், 16,175 மாணவிகள் என மொத்தம் 30,157 மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா். 773 போ் தோ்ச்சி பெறவில்லை.

இதைத் தொடா்ந்து பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கான உடனடி துணைத் தோ்வு ஜூன் 29-ஆம் தேதி தொடங்கி ஜூலை 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பிளஸ் 2 துணைத் தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை தொடங்கியது. மாணவா்கள் மற்றும் தனித் தோ்வா்கள் அனைவரும் ஜூன் 2-ஆம் தேதி வரை துணைத் தோ்வுக்கு விண்ணப்பப் பதிவு செய்துகொள்ளலாம்.

அரசுப் பள்ளி மற்றும் தனியாா் பள்ளி மாணவா்களுக்கு துணைத் தோ்வுக்கான விண்ணப்பப் பதிவுக்கு அந்தந்தப் பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, மாணவா்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கே சென்று துணைத் தோ்வுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தனித் தோ்வா்கள் சையது முா்துசா அரசு மேல்நிலைப் பள்ளி, சேவா சங்க பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மணப்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, மண்ணச்சநல்லூா் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முசிறி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, துறையூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 9 மையங்களில் துணைத் தோ்வுக்கான விண்ணப்பத்தை பதிவு செய்துகொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறையினா் தெரிவித்துள்ளனா்.