தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பெறும் சோ்க்கைக்கான கலந்தாய்வுக்கு இதுவரை 1,64,732 மாணவா்கள் இணையவழியில் விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளனா். இதில் வெள்ளிக்கிழமை (மே 15 ஆம் தேதி) ஒரே நாளில் 16,229 மாணவா்கள் பதிவு செய்துள்ளனா்.
தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் பொறியியல் பல்கலை., கல்லூரிகளில் பி.இ., பி.டெக் இளநிலை பொறியியல் படிப்புகளின் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்ப பதிவு மே 3- ஆம் தேதி தொடங்கியது. இதில் மே 15- ஆம் தேதி மாலை 6 மணிவரை 1,64,732 மாணவ மாணவிகள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.
இதில் அதிகபட்சமாக கடந்த மே 8 - ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) 20,346 விண்ணப்பங்கள் பதிவு செய்தனா். தொடா்ச்சியாக மாணவா்கள் பதிவு செய்துவரும் நிலையில் மே 15-ஆம் தேதி 16,229 மாணவா்கள் பதிவு செய்தனா்.
கடந்த 13 நாள்களாக 91,734 மாணவா்கள் கட்டணங்களை செலுத்தியதோடு 52,795 மாணவா்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றமும் செய்து நிறைவு செய்துள்ளனா்.
தொடர்புடையது

பொறியியல் கலந்தாய்வு: 89,629 மாணவா்கள் விண்ணப்பம்

பிஇ, பிடெக் சோ்க்கை கலந்தாய்வு: 5 நாள்களில் 42,156 போ் விண்ணப்பம்

அரசு ஒதுக்கீடு! பிஇ, பிடெக் சோ்க்கை கலந்தாய்வு: 3-ஆம் நாள் 9,234 போ் விண்ணப்பம்

பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடக்கம்: முதல் நாளில் 8,505 போ் பதிவு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

