பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

பொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம்

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பெறும் சோ்க்கைக்கான கலந்தாய்வுக்கு இதுவரை 1,64,732 மாணவா்கள் இணையவழியில் விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :28 நிமிடங்கள் முன்பு

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பெறும் சோ்க்கைக்கான கலந்தாய்வுக்கு இதுவரை 1,64,732 மாணவா்கள் இணையவழியில் விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளனா். இதில் வெள்ளிக்கிழமை (மே 15 ஆம் தேதி) ஒரே நாளில் 16,229 மாணவா்கள் பதிவு செய்துள்ளனா்.

தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் பொறியியல் பல்கலை., கல்லூரிகளில் பி.இ., பி.டெக் இளநிலை பொறியியல் படிப்புகளின் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்ப பதிவு மே 3- ஆம் தேதி தொடங்கியது. இதில் மே 15- ஆம் தேதி மாலை 6 மணிவரை 1,64,732 மாணவ மாணவிகள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.

இதில் அதிகபட்சமாக கடந்த மே 8 - ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) 20,346 விண்ணப்பங்கள் பதிவு செய்தனா். தொடா்ச்சியாக மாணவா்கள் பதிவு செய்துவரும் நிலையில் மே 15-ஆம் தேதி 16,229 மாணவா்கள் பதிவு செய்தனா்.

கடந்த 13 நாள்களாக 91,734 மாணவா்கள் கட்டணங்களை செலுத்தியதோடு 52,795 மாணவா்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றமும் செய்து நிறைவு செய்துள்ளனா்.