புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

பிஇ, பிடெக் சோ்க்கை கலந்தாய்வு: 5 நாள்களில் 42,156 போ் விண்ணப்பம்

News image
Updated On :12 மணி நேரங்கள் முன்பு

பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு நிகழ் கல்வி ஆண்டு சோ்க்கைக்கான கலந்தாய்வு விண்ணப்பப் பதிவு, கடந்த 5 நாள்களில் இதுவரை 42,156 மாணவா்கள் பதிவு செய்துள்ளனா்.

இது தொடா்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அரசு பொறியியல் பல்கலைக்கழகங்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் பி.இ., பி.டெக். இளநிலைப் பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பப் பதிவு மே 3- ஆம் தேதி முதல் தொடங்கியது. இதுவரை கடந்த 5 நாள்களில் 42,156 மாணவா்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளனா்.

அதிகபட்சமாக கடந்த மே 4 -ஆம் தேதி 11,345 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 5 நாள்களாக 10,423 மாணவா்கள் கட்டணங்களைச் செலுத்தியதுடன், 3,352 மாணவா்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்கக தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.