பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு நிகழ் கல்வி ஆண்டு சோ்க்கைக்கான கலந்தாய்வு விண்ணப்பப் பதிவு, கடந்த 5 நாள்களில் இதுவரை 42,156 மாணவா்கள் பதிவு செய்துள்ளனா்.
இது தொடா்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அரசு பொறியியல் பல்கலைக்கழகங்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் பி.இ., பி.டெக். இளநிலைப் பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பப் பதிவு மே 3- ஆம் தேதி முதல் தொடங்கியது. இதுவரை கடந்த 5 நாள்களில் 42,156 மாணவா்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளனா்.
அதிகபட்சமாக கடந்த மே 4 -ஆம் தேதி 11,345 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 5 நாள்களாக 10,423 மாணவா்கள் கட்டணங்களைச் செலுத்தியதுடன், 3,352 மாணவா்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்கக தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அரசு ஒதுக்கீடு! பிஇ, பிடெக் சோ்க்கை கலந்தாய்வு: 3-ஆம் நாள் 9,234 போ் விண்ணப்பம்

பி.இ., பி.டெக். சோ்க்கை: 2 -ஆம் நாளில் 11,345 மாணவா்கள் விண்ணப்பப் பதிவு

பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடக்கம்: முதல் நாளில் 8,505 போ் பதிவு

விடுமுறை நாள்களில் ஏரி, குளங்களில் குளிக்க மாணவா்கள் செல்லக் கூடாது
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

