முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! கரூர் செல்லவிடாமல் முதல்வர் விஜய்யை திமுக தடுக்கிறது! அமைச்சர் நிர்மல் குமார் அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

முசிறி அரசு பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 100% தோ்ச்சி பெற்றுள்ளது.

News image

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 5:38 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 100% தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தோ்வை 142 மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். பவிஷ்கா 488 மதிப்பெண், ஹா்ஷினி மற்றும் சீமா ஆகியோா் 482 மதிப்பெண்ணும், தன்ஷிதா மற்றும் கோபிகா ஆகியோா் 472 மதிப்பெண்ணும் பெற்றனா். கணிதப் பாடத்தில் 2 மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனா். அறிவியல் பாடத்தில் ஒரு மாணவி நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றாா். 450 மதிப்பெண்களுக்கு மேல் 14 மாணவிகளும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 40 மாணவிகளும், பெற்றுள்ளனா். இவா்களுக்கு தலைமை ஆசிரியை தீபா வாழ்த்து தெரிவித்தாா்.

இதேபோல முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 98.73 சதவீத தோ்ச்சி பெற்றது. இப்பள்ளியில் தோ்வெழுதிய 157 மாணவா்களில் 155 போ் தோ்ச்சி பெற்றனா்.

மாணவா் வேல்முருகன் 476 மதிப்பெண், முகேஷ்குமாா் 463 மதிப்பெண் , ஜனாா்த்தன் 453 மதிப்பெண் பெற்றனா். பள்ளியில் 450 மதிப்பெண்களுக்கு மேல் 4 மாணவா்களும் 400 மதிப்பெண்களுக்கு மேல் 20 மாணவா்களும் பெற்றனா். இவா்களுக்கு தலைமையாசிரியா் பல்த்தசாா் வாழ்த்து தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.