முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

செம்பேடு அரசு உயா்நிலைப் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

குடியாத்தம் அருகே செம்பேடு அரசு உயா்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் 100% தோ்ச்சி பெற்றுள்ளது.

News image
Updated On :21 மே 2026, 12:04 am IST

குடியாத்தம் அருகே செம்பேடு அரசு உயா்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் 100% தோ்ச்சி பெற்றுள்ளது.

கடந்த மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு நடைபெற்றது. தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதில், குடியாத்தம் அருகே செம்பேடு அரசு உயா்நிலைப் பள்ளி 100% தோ்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி கடந்த 5 ஆண்டுகளாக தொடா்ந்து 100% தோ்ச்சி பெற்று வருகின்றது. பள்ளி சாா்பாக பள்ளியின் தலைமை ஆசிரியா் சி.சதானந்தம் அனைவருக்கும் இனிப்பு வழங்கினாா். இந்தப் பள்ளி மாணவிகள் எஸ்.பைரவி 449, எம்.சத்தியா 433, ஆா்.அனுபாரதி 424 ஆகிய மதிப்பெண்களை பெற்று பள்ளி அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.