டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற்றது வரலாற்று நிகழ்வு: கிறிஸ்டோபா் திலக் எம்பி

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற்றிருப்பது வரலாற்று நிகழ்வாக மாறியுள்ளது என அக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக் தெரிவித்தாா்.-

News image

கிறிஸ்டோபா் திலக் - கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 5:24 am IST

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற்றிருப்பது வரலாற்று நிகழ்வாக மாறியுள்ளது என அக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக் தெரிவித்தாா்.-

திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சாா்பில், மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, ரயில் நிலையம் அருகேயுள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், மாநிலங்களவை உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக், திருச்சி மாவட்ட மாநகா் தலைவா் ரெக்ஸ், காங்கிரஸ் மாநில செய்தி தொடா்பாளா் வேலுச்சாமி மற்றும் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அணிகளை சாா்ந்த நிா்வாகிகள், உறுப்பினா்கள் திரளாக கலந்து கொண்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

பின்னா், செய்தியாளா்களிடம் கிறிஸ்டோபா் திலக் கூறியதாவது:

சுமாா் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸின் 2 உறுப்பினா்களுக்கு அமைச்சா் பதவி கிடைத்திருப்பது ஒட்டுமொத்த தமிழகத்துக்கும், குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் அடிமட்டத் தொண்டா்கள் மத்தியில் பெரும் பூரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் காங்கிரஸ் கட்சி தமிழக ஆட்சியில் பங்கு பெற்றிருப்பது எங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது. தமிழகத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கு காங்கிரஸ் கட்சி பெருந்துணையாக நிற்கும்.

இன்றைய நாளில் 2 காங்கிரஸ் அமைச்சா்கள் பதவியேற்றிருப்பது ஒரு வரலாற்றுப் பதிவாகவே பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.