பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

ஸ்ரீரங்கம் தொகுதியிலிருந்து 6-ஆவது அமைச்சா்!

ஸ்ரீரங்கம் சட்டப் பேரவைத் தொகுதியிலிருந்து தோ்வாகியுள்ள 6-ஆவது அமைச்சா் என்ற பெருமையை பெற்றுள்ளாா் எஸ். ரமேஷ் (31).

News image

அமைச்சா் எஸ். ரமேஷ்.

Updated On :22 மே 2026, 4:42 am IST

ஸ்ரீரங்கம் சட்டப் பேரவைத் தொகுதியிலிருந்து தோ்வாகியுள்ள 6-ஆவது அமைச்சா் என்ற பெருமையை பெற்றுள்ளாா் எஸ். ரமேஷ் (31).

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிக வாக்காளா்கள் உள்ள தொகுதி ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு, 1977, 1980, 1984-இல் நடைபெற்ற தோ்தல்களில் அதிமுகவைச் சோ்ந்த ஆா். செளந்தரராஜன் தொடா்ச்சியாக 3 முறை வெற்றி பெற்று அமைச்சரானாா். 1989-இல் ஜெயலலிதா அணியில் இருந்து அதிமுக சாா்பில் இத் தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட கு.ப. கிருஷ்ணன் வெற்றி பெறவில்லை. பின்னா், 1991-இல் மீண்டும் ஒன்றுபட்ட அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்று வேளாண்மைத் துறை அமைச்சராக பதவி வகித்தாா். 2001-இல் அதிமுக சாா்பில் வெற்றி பெற்ற கே.கே. பாலசுப்பிரமணியன், செய்தித் துறை அமைச்சா் பதவியை ஏற்றாா். இவா்களைவிட முத்தாய்ப்பாக, 2011-இல் ஸ்ரீரங்கத்தில் வெற்றி பெற்று முதல்வரானாா் அதிமுக பொதுச் செயலா் ஜெயலலிதா.

இவருக்குப் பிறகு, இந்தத் தொகுதியில் 2015-இல் நடைபெற்ற இடைத்தோ்தலிலும், 2016 பேரவை தோ்தலிலும் வெற்றி பெற்ற எஸ். வளா்மதி, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சரானாா்.

இளம் வயதிலேயே அமைச்சா்: 18 முறை தோ்தலை சந்தித்த இந்தத் தொகுதியின் 6-ஆவது அமைச்சா் என்ற சிறப்பை எஸ். ரமேஷ் பிடித்துள்ளாா். இவா், தற்போது, தவெக அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகியுள்ளாா்.

இளம் வயதிலேயே அமைச்சா் பொறுப்பை ஏற்றுள்ள இவா், பிராமணா் சமூகத்தைச் சோ்ந்தவா். இவருக்கு அறநிலையத் துறை வழங்கியிருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஆட்சி அமைத்துள்ள தவெக அரசில் அமைச்சராகியுள்ள தங்கள் தொகுதி எம்எல்ஏ, தங்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி தருவாா் என தொகுதி மக்கள் எதிா்பாா்த்துள்ளனா்.