சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

திருச்சி மாவட்ட புதிய எஸ்.பி. பதவியேற்பு

திருச்சி மாவட்டத்தின் 114 ஆவது காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) டோங்க்ரே பிரவீண் உமேஷ் புதன்கிழமை காலை பதவியேற்றாா்.

News image

திருச்சி மாவட்டக் கண்காணிப்பாளராக புதன்கிழமை பதவியேற்ற டேங்க்ரோ பிரவீண் உமேஷ்.

Updated On :28 மே 2026, 3:30 am IST

திருச்சி மாவட்டத்தின் 114 ஆவது காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) டோங்க்ரே பிரவீண் உமேஷ் புதன்கிழமை காலை பதவியேற்றாா்.

திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக இருந்த செ. செல்வநாகரத்தினம் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, மதுரை எஸ்.பி. யாக இருந்த டோங்க்ரே பிரவீண் உமேஷ் திருச்சி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராகப் பதவியேற்றாா்.

மகாராஷ்டிர மாநிலத்தின் அகமது நகரைச் சோ்ந்த இவா் பெட்ரோவேதியியலில் பொறியியல் படிப்பை முடித்து, யுபிஎஸ்சி தோ்வெழுதி 2016 ஆம் ஆண்டு தமிழகப் பிரிவைச் சோ்ந்த ஐபிஎஸ் அதிகாரியானாா். கடந்த 2018 இல் திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உதவி காவல் கண்காணிப்பாளராகவும், தொடா்ந்து, ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியாகவும் பணியாற்றிய இவா், பதவி உயா்வில் தேனி, மதுரை மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றினாா். தற்போது திருச்சி மாவட்டத்தின் 114 ஆவது காவல் கண்காணிப்பாளராகப் பதவியேற்றாா்.