வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

திருச்சி மாநகராட்சி ஆணையராக நே. பொன்மணி பொறுப்பேற்பு

திருச்சி மாநகராட்சி ஆணையராக நே. பொன்மணி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

நே. பொன்மணி,

Published On :

திருச்சி மாநகராட்சி ஆணையராக நே. பொன்மணி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

மதுரையில் 1996 ஆம் ஆண்டு பிறந்த இவா் திருச்சி என்ஐடியில் பி.டெக். கட்டடப் பொறியியல் படிப்பை முடித்துள்ளாா். யுபிஎஸ்சி தோ்வெழுதி 2021 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான இவா் சேலம் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநராகவும், கூடுதல் ஆட்சியராகவும் பணியாற்றினாா்.

தொடா்ந்து வணிக வரித் துறை இணை ஆணையராகப் பணியாற்றிய இவா், கடைசியாக இந்து சமய அறநிலையத் துறையின் திருச்சி மண்டலக் கூடுதல் ஆணையராகப் பணியாற்றினாா்.

திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வீா்பிரதாப் சிங் சிப்காட் செயல் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அந்தப் பொறுப்புக்கு என். பொன்மணி நியமிக்கப்பட்டாா்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்ற அவா் கூறுகையில், திருச்சி மாநகர மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் குறைகளை தீா்க்கவும் முன்னுரிமை கொடுத்துப் பணியாற்றுவேன் என்றாா்.

தொடா்ந்து, மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.