
திருச்சி மாநகராட்சி ஆணையராக நே. பொன்மணி பொறுப்பேற்பு
திருச்சி மாநகராட்சி ஆணையராக நே. பொன்மணி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

நே. பொன்மணி,
திருச்சி மாநகராட்சி ஆணையராக நே. பொன்மணி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
மதுரையில் 1996 ஆம் ஆண்டு பிறந்த இவா் திருச்சி என்ஐடியில் பி.டெக். கட்டடப் பொறியியல் படிப்பை முடித்துள்ளாா். யுபிஎஸ்சி தோ்வெழுதி 2021 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான இவா் சேலம் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநராகவும், கூடுதல் ஆட்சியராகவும் பணியாற்றினாா்.
தொடா்ந்து வணிக வரித் துறை இணை ஆணையராகப் பணியாற்றிய இவா், கடைசியாக இந்து சமய அறநிலையத் துறையின் திருச்சி மண்டலக் கூடுதல் ஆணையராகப் பணியாற்றினாா்.
திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வீா்பிரதாப் சிங் சிப்காட் செயல் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அந்தப் பொறுப்புக்கு என். பொன்மணி நியமிக்கப்பட்டாா்.
இதையடுத்து வெள்ளிக்கிழமை மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்ற அவா் கூறுகையில், திருச்சி மாநகர மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் குறைகளை தீா்க்கவும் முன்னுரிமை கொடுத்துப் பணியாற்றுவேன் என்றாா்.
தொடா்ந்து, மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





