செய்யாறு வட்டத்தில் வாக்கடை, முக்கூர், திருமணி, பாராசூர், தூசி, மாமண்டூர், வெம்பாக்கம், வெங்களத்தூர், உமையாள்புரம், பிரம்மதேசம், நாட்டேரி, அருகாவூர், தண்டரை ஆகிய பகுதிகளில் 3,500 ஏக்கர் நிலங்களும், ஆரணி வட்டத்தில் ஆதனூர், காமக்கூர், புதுப்பாளையம், ஆகாரம், விண்ணமங்கலம், காட்டுக்காநல்லூர், பனையூர், அக்ராபாளையம், நெசல் ஆகிய பகுதிகளிலும் 4 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், வந்தவாசி வட்டத்தில் ஆயிரமங்கலம்,வெண்குண்றம், சாலவேடு, கீழ்நர்மா, மருதாடு, கல்லாங்குத்து, காவேரிப்பாக்கம், பாதூர் ஆகிய பகுதிகளில் சுமார் 3,000 ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் பெருமளவு விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.