கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கருங்கற்களை கடத்தி வந்த வேன் பறிமுதல்

கருங்கற்களை கடத்தி வந்த வேன் பறிமுதல்

News image

பறிமுதல்  செய்யப்பட்ட  கருங்கல்  கம்பங்கள்.

Updated On :9 ஜூன் 2024, 6:33 pm

Din

குடியாத்தம்: ஆந்திர மாநிலத்திலிருந்து வேன் மூலம் கடத்தி வந்த கருங்கற்களையும், வேனையும் வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

போ்ணாம்பட்டு வருவாய்த் துறையினா் ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள பத்தரபல்லி சோதனைச் சாவடி அருகே ஞாயிற்றுக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த தமிழக பதிவெண் கொண்ட வேனை நிறுத்தி சோதனையிட்டனா்.

வேனில் ஆந்திர மாநிலத்திலிருந்து 80- வேலி கம்பங்கள், 15- பாறைகள் இருந்ததும், அனுமதியின்றி கற்களை வெட்டி எடுத்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து வேலி கம்பங்கள், பாறைகளுடன் வேனையும் வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட கருங்கற்களும், வேனும் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.