தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எம்எல்ஏ அலுவலகங்களுக்கு ‘சீல்’

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத்தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினா்

News image
சங்கராபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை, வட்டாட்சியா் வைரக்கண்ணன் முன்னிலையில் சீல் வைத்த வருவாய்த் துறையினா்.
Updated On :16 மார்ச் 2026, 11:35 pm

Syndication

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத்தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகங்களுக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.

கள்ளக்குறிச்சி ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவின் பேரில், கள்ளக்குறிச்சி (தனி), சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை உள்ளிட்ட 5 சட்டப்பேரவைத் தொகுதிகளின் எம்எல்ஏ அலுவலகங்களைப் பூட்டி, அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த வட்டாட்சியா் முன்னிலையில் வருவாய்த் துறை அலுவலா்கள் ‘சீல்’ வைத்தனா்.