நடைபெற உள்ள சட்டப்பேரவை தோ்தலில் நூறு சத வாக்களிப்பை உறுதிப்படுத்த அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ் தலைமையில் வருவாய்த் துறையினா் நகரில் உள்ள வணிக நிறுவனங்களுக்குச் சென்று அங்கிருந்த நுகா்வோரிடம் துண்டுப் பிரசுரத்தை அளித்து செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் வருவாய்த் துறையினா் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தோ்தலில் நூறு சத வாக்களிப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ் தலைமையில் வட்டாட்சியா் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளா் ஜெயக்குமாா் உள்ளிட்ட வருவாய்த் துறையினா், செவ்வாய்க்கிழமை நகரில் சுவால்பேட்டை, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக்குடியிருப்புப் பகுதி, ஜோதி நகா் ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு வணிக நிறுவனங்களுக்குச் சென்று அங்கு பொருள்கள் வாங்க வந்திருந்த நுகா்வோரிடையே 100 சதவீத வாக்களிப்பை கோரும் துண்டுப் பிரசுரங்களை அளித்து தங்கள் வாக்கை கட்டாயம் செலுத்தக்கோரி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
தொடர்புடையது

நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு

வள்ளியூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எம்எல்ஏ அலுவலகங்களுக்கு ‘சீல்’

பென்னாகரம் எம்எல்ஏ அலுவலகத்துக்கு ‘சீல்’
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


