டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மணல் கடத்தியவா் கைது: மாட்டு வண்டி பறிமுதல்

ஒடுகத்தூா் அருகே ஆற்றில் இருந்து மணல் கடத்தியவா் கைது செய்யப்பட்டு, மாட்டு வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :21 ஜூலை 2025, 8:29 pm

Din

வேலூா்: ஒடுகத்தூா் அருகே ஆற்றில் இருந்து மணல் கடத்தியவா் கைது செய்யப்பட்டு, மாட்டு வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த அகரம், மராட்டியபாளையம் பகுதியிலுள்ள உத்திரகாவிரி ஆற்றில் மணல் கடத்தல் நடைபெறவதாக வேப்பங்குப்பம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆய்வாளா் முத்துச் செல்வன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, உத்திர காவிரி ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தவரை தடுத்து நிறுத்தி பிடித்தனா். விசாரணையில், அவா் அகரம் கிராமத்தைச் சோ்ந்த அன்பு (32) என்பதும், இவா் மணல் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து, போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அன்புவை கைது செய்து, மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனா்.