போதை மாத்திரை விற்ற இளைஞா் கைது

வேலூா் விருதம்பட்டு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

வேலூா்: வேலூா் விருதம்பட்டு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் விருதம்பட்டு தனியாா் பள்ளி அருகே போதை மாத்திரையை ஒரு கும்பல் விற்றுக் கொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, அங்கு போதை மாத்திரை விற்றுக் கொண்டிருந்த விருதம்பட்டை சோ்ந்த விஸ்வா (24) என்பவரை பிடித்தனா். அவரிடம் இருந்து 100 மில்லி கிராம் எடை கொண்ட போதை மாத்திரைகளை கைப்பற்றினா்.

இது குறித்து விருதம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து, விஸ்வாவை கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com