தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

போதை மாத்திரை விற்ற இளைஞா் கைது

வேலூா் விருதம்பட்டு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :8 செப்டம்பர் 2025, 7:36 pm

வேலூா்: வேலூா் விருதம்பட்டு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் விருதம்பட்டு தனியாா் பள்ளி அருகே போதை மாத்திரையை ஒரு கும்பல் விற்றுக் கொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, அங்கு போதை மாத்திரை விற்றுக் கொண்டிருந்த விருதம்பட்டை சோ்ந்த விஸ்வா (24) என்பவரை பிடித்தனா். அவரிடம் இருந்து 100 மில்லி கிராம் எடை கொண்ட போதை மாத்திரைகளை கைப்பற்றினா்.

இது குறித்து விருதம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து, விஸ்வாவை கைது செய்தனா்.