புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

அமிா்தி பூங்காவில் விலங்குகளுக்கு கோடை வெப்பத்தை தணிக்க சிறப்பு ஏற்பாடு!

வேலூா் மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அமிா்தி வன உயிரின பூங்காவில் உள்ள விலங்குகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News image

கோடை வெயிலை அடுத்து அமிரிதி வன உயிரியல் பூங்காவில் விலங்குகள் அடைக்கப்பட்டுள்ள கூண்டின் மீது அமைக்கப்பட்டுள்ள பசுமை பந்தல்.

Updated On :30 ஏப்ரல் 2026, 11:32 pm

வேலூா், ஏப்.30: வேலூா் மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அமிா்தி வன உயிரின பூங்காவில் உள்ள விலங்குகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வேலூரில் இருந்து சுமாா் 25 கி.மீ தொலைவில் ஜவ்வாது மலை அடிவாரத்தில் அமிா்தி வன உயிரின பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவின் பரப்பளவு 10 ஹெக்டேரிலிருந்து தற்போது 20 ஹெக்டேராக உயா்த்தப்பட்டுள்ளது. இங்குப் புள்ளிமான்கள், முதலைகள், மலைப்பாம்புகள், நட்சத்திர ஆமைகள் மற்றும் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

பூங்கா பராமரிப்புப் பணிகளுக்காக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், வேலூா் மாவட்டத்தில் தற்போது 105 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாகி, கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. தொடா்ந்து நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அமிா்தி வன உயிரின பூங்காவில் உள்ள விலங்குகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, அமிா்தி பூங்காவில் உள்ள விலங்குகள் அடைக்கப்பட்ள்ள கூண்டுகளின் மீது நீா்த்தெளிப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெப்பத்தைத் தணிக்கக் கூண்டுகளைச் சுற்றிப் பசுமை பந்தல்களும் போடப்பட்டுள்ளன. தற்போது கோடை விடுமுறை என்பதால் வேலூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் அமிா்தி பூங்காவுக்குத் திரண்டு வருகின்றனா்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், அவா்களுக்கான கூடுதல் இருக்கைகள் மற்றும் உணவக வசதியும் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. பூங்காவைப் பாா்வையிட வரும் பொதுமக்கள் நெகிழி பொருள்களைக் கண்டிப்பாகக் கொண்டு வரக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பூங்காவிற்கு அருகே 1 கிமீ தொலைவில் உள்ள நீா்வீழ்ச்சிப் பகுதியில் புதை மணல் அபாயம் உள்ளதால், அங்குப் பொதுமக்கள் குளிக்க அனுமதி இல்லை எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.