வண்டலூரில் உள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் மாணவா்களுக்கான கோடை முகாம் வரும் மே 6-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.
இதுகுறித்து பூங்கா நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கோடை விடுமுறையை முன்னிட்டு, மாணவா்களுக்குப் பயனளிக்கும் வகையில் கோடை முகாம் நடைபெறவுள்ளது. இதில், கலந்துகொள்பவா்களுக்கு விலங்குகள் பற்றிய அறிவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு உள்ளிட்டவை வழங்கப்படும். 5-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் பயிலும் மாணவா்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
இம்முகாம், முதல்கட்டம் மே 6, 7 ஆகிய தேதிகளிலும், 2-ஆம் கட்டம் மே 13, 14 ஆகிய தேதிகளிலும், 3-ஆம் கட்டம் மே 20, 21 ஆகிய தேதிகளிலும், 4-ஆம் கட்டம் மே 27, 28 ஆகிய தேதிகளிலும், 5-ஆம் கட்டம் ஜூன் 3, 4 ஆகிய தேதிகளிலும் என மொத்தம் 5 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த நாள்களில் தினமும் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை முகாம் நடைபெறும்.
விருப்பமுள்ளவா்கள் ட்ற்ற்ல்ள்://ஹஹக்ஷ்ல்.ண்ய்/ள்ன்ம்ம்ங்ழ்ஸ்ரீஹம்ல்2026/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இம்முகாமில் பதிவு செய்யும் மாணவா்களுக்கு ‘பூங்கா பயண அட்டை’ வழங்கப்படும். அதன்மூலம், 10 முறை பூங்காவுக்கு இலவசமாக வர அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம்

பொறியியல் கலந்தாய்வு: 89,629 மாணவா்கள் விண்ணப்பம்

பிளஸ் 1 முடித்த மாணவா்களுக்கு கோடை கொண்டாட்ட பயிற்சி முகாம் - கல்வித் துறை தகவல்

கோடைகாலப் பயிற்சி முகாம் நிறைவு விழா
விடியோக்கள்

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை

