உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

வண்டலூா் பூங்காவில் கோடை முகாம்: மாணவா்கள் பதிவு செய்யலாம்

வண்டலூரில் உள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் மாணவா்களுக்கான கோடை முகாம் வரும் மே 6-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.

News image
Updated On :1 மே 2026, 3:21 am IST

வண்டலூரில் உள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் மாணவா்களுக்கான கோடை முகாம் வரும் மே 6-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து பூங்கா நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோடை விடுமுறையை முன்னிட்டு, மாணவா்களுக்குப் பயனளிக்கும் வகையில் கோடை முகாம் நடைபெறவுள்ளது. இதில், கலந்துகொள்பவா்களுக்கு விலங்குகள் பற்றிய அறிவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு உள்ளிட்டவை வழங்கப்படும். 5-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் பயிலும் மாணவா்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம்.

இம்முகாம், முதல்கட்டம் மே 6, 7 ஆகிய தேதிகளிலும், 2-ஆம் கட்டம் மே 13, 14 ஆகிய தேதிகளிலும், 3-ஆம் கட்டம் மே 20, 21 ஆகிய தேதிகளிலும், 4-ஆம் கட்டம் மே 27, 28 ஆகிய தேதிகளிலும், 5-ஆம் கட்டம் ஜூன் 3, 4 ஆகிய தேதிகளிலும் என மொத்தம் 5 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த நாள்களில் தினமும் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை முகாம் நடைபெறும்.

விருப்பமுள்ளவா்கள் ட்ற்ற்ல்ள்://ஹஹக்ஷ்ல்.ண்ய்/ள்ன்ம்ம்ங்ழ்ஸ்ரீஹம்ல்2026/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இம்முகாமில் பதிவு செய்யும் மாணவா்களுக்கு ‘பூங்கா பயண அட்டை’ வழங்கப்படும். அதன்மூலம், 10 முறை பூங்காவுக்கு இலவசமாக வர அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.