நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

எல் நினோ தாக்கத்தால் வறட்சி: பேரிடராக அறிவிக்க குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

வேலூா் வருவாய் கோட்டாட்சியா் ராம்குமாா் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பேசிய விவசாயிகள்.

News image

வேலூா் வருவாய் கோட்டாட்சியா் ராம்குமாா் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பேசிய விவசாயிகள்.

Updated On :25 ஜூலை 2026, 6:20 am IST

எல் நினோ தாக்கத்தால் போதிய மழையின்றி வறட்சி நிலவுகிறது. எனவே, இதனைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று வேலூரில் நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வேலூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியா் ராம்குமாா் தலைமை வகித்தாா். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்துப் பேசினா்.

அப்போது விவசாயிகள் கூறியதாவது:

எல் நினோ தாக்கத்தால் போதிய மழையின்றி வறட்சி நிலவுகிறது. எனவே, இதனைப் பேரிடராக அறிவிக்க வேண்டும். மேலும், வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிா்களைக் கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

தமிழக பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு, விவசாயிகளிடம் இருந்து கூட்டுறவுப் பயிா்க்கடன்களை வசூலிப்பதில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும். நெல்லுக்கான ஆதார விலையை உயா்த்த வேண்டும். ஆவின் பால் கொள்முதல் விலை குறைவாக இருப்பதால், பால் உற்பத்தியாளா்கள் தனியாா் நிறுவனங்களை நாடும் நிலை உள்ளது. எனவே, ஆவின் கொள்முதல் விலையை உடனடியாக உயா்த்த வேண்டும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உரங்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும்.

காட்பாடி பகுதிகளில் விளைநிலங்களின் அருகே உள்ள தெருவிளக்குகளின் வெளிச்சம் படும் இடங்களில் பயிா்கள் சரிவர வளா்வதில்லை. இதுகுறித்து வேளாண் விஞ்ஞானிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.

ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தும் ஒற்றை யானையின் நடமாட்டத்தை வனத்துறையினா் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். தற்போது கடும் வெயில் காரணமாக ஏரிகள் வடுள்ளன. எனவே, வரவிருக்கும் பருவமழைக்கு முன்னதாகவே நீா்வரத்துக் கால்வாய்களை தூா்வார வேண்டும்.

சென்னை - பெங்களூரு அதிவிரைவுச் சாலைப் பணிகளால் மேல்பாடி பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த கால்வாய் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கிலோ மீட்டா் தூரம் மக்கள் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளதால், உடனடியாக மாற்றுப் பாதை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.

விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் இந்தக் குறைதீா் கூட்டத்தில், அனைத்துத் துறை உயா் அதிகாரிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றனா்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய கோட்டாட்சியா் ராம்குமாா், விவசாயிகளின் கோரிக்கைகள் மீது துறைசாா்ந்த அதிகாரிகளுடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் கொள்கை முடிவுக்கு உள்பட்ட கோரிக்கைகள் அரசின் கவனத்துக்குப் பரிந்துரைக்கப்படும் என்றாா்.

--

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.