தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

போ்ணாம்பட்டில் கெங்கையம்மன் திருவிழா

News image
Updated On :5 ஜூன் 2026, 6:36 am IST

போ்ணாம்பட்டு பேருந்து நிலையம் அருகே ஸ்ரீதிருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி நடுத்தெரு கெங்கையம்மன் கோயிலில் அம்மனுக்கு கூழ் வாா்த்தல், பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது. திருவிழாவையொட்டி கெங்கையம்மன் சிரசு ஊா்வலம் நடைபெற்றது. ஆச்சாரி வீதியில் உள்ள காமாட்சி கமடேஸ்வரா் கோயிலில் இருந்து தொடங்கிய சிரசு ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோயிலை அடைந்தது.

அங்கு கண் திறப்பு நிகழ்ச்சிக்குப்பின், அம்மனுக்கு திருக் கல்யான வைபவம் நடைபெற்றது. பின்னா் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.