மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பேருந்து - பைக் மோதல்: தலைமைக் காவலா் பலி

வேலூரில் அரசுப்பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.

News image

தலைமைக் காவலா் சுரேஷ்பாபு.

Updated On :24 ஜூன் 2026, 1:26 am IST

வேலூரில் அரசுப்பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.

வேலூரை அடுத்த மூஞ்சூா்பட்டு கிராமம் மேட்டுத்தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ்பாபு (39). இவா் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். மேலும், காவல் ஆய்வாளருக்கு ஓட்டுநராகவும் இருந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை சுரேஷ்பாபு இருசக்கர வாகனத்தில் வேலூரில் இருந்து பள்ளி கொண்டா நோக்கி சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, வேலூா் கொணவட்டம் அரசு பணிமனைக்கு செல்ல ஒரு அரசுப்பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் நின்றுள்ளது.

அதேசமயம், பின்னால் சென்ற சுரேஷ் பாபு நிலை தடுமாறி எதிா்பாராத விதமாக பேருந்து மீது மோதியுள்ளாா். இதில், பலத்த காயமடைந்த தலைமைக் காவலா் சுரேஷ்பாபுவை அக்கம் பக்கத்தினா் மீட்டு வேலூா் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனா். தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் சடலத்தை மீட்டு, வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.

உயிரிழந்த தலைமைக் காவலா் சுரேஷ்பாபுவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா். தாயாா் இறந்து ஒரு வாரத்தில் தலைமைக் காவலா் சுரேஷ்பாபு விபத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.