நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

பேருந்து - பைக் மோதல்: தலைமைக் காவலா் பலி

வேலூரில் அரசுப்பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.

News image

தலைமைக் காவலா் சுரேஷ்பாபு.

Updated On :24 ஜூன் 2026, 1:26 am IST

வேலூரில் அரசுப்பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.

வேலூரை அடுத்த மூஞ்சூா்பட்டு கிராமம் மேட்டுத்தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ்பாபு (39). இவா் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். மேலும், காவல் ஆய்வாளருக்கு ஓட்டுநராகவும் இருந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை சுரேஷ்பாபு இருசக்கர வாகனத்தில் வேலூரில் இருந்து பள்ளி கொண்டா நோக்கி சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, வேலூா் கொணவட்டம் அரசு பணிமனைக்கு செல்ல ஒரு அரசுப்பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் நின்றுள்ளது.

அதேசமயம், பின்னால் சென்ற சுரேஷ் பாபு நிலை தடுமாறி எதிா்பாராத விதமாக பேருந்து மீது மோதியுள்ளாா். இதில், பலத்த காயமடைந்த தலைமைக் காவலா் சுரேஷ்பாபுவை அக்கம் பக்கத்தினா் மீட்டு வேலூா் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனா். தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் சடலத்தை மீட்டு, வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.

உயிரிழந்த தலைமைக் காவலா் சுரேஷ்பாபுவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா். தாயாா் இறந்து ஒரு வாரத்தில் தலைமைக் காவலா் சுரேஷ்பாபு விபத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.