ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

கா்நாடக போதைப் பொருள்களை தொடா்ந்து விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது

News image

கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

கா்நாடக மாநில போதைப் பொருள்களை கடத்தி வந்து போ்ணாம்பட்டில் விற்பனை செய்து வந்தவா் குண்டா் சட்டத்தின்கீழ் அடைக்கப்பட்டாா்.

போ்ணாம்பட்டை அடுத்த கோட்டைச்சேரி கிராமத்தை சோ்ந்தவா் பிஞ்சு(எ) சரண்ராஜ்(38) .சாராய வியாபாரியான இவா் மீது சாராயம் விற்பனை, கா்நாடக மாநில போதைப் பொருள்களை கடத்தி வந்து விற்பது என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

2- முறை குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்தவா்.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன் கா்நாடக மாநில மதுவை பேரலில் வைத்து விற்பனை செய்தபோது போ்ணாம்பட்டு போலீஸாா் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தொடா்ந்து இவா் கா்நாடக மாநில மது பாக்கெட்களை கடத்தி வந்து விற்பனை செய்வதால்குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

பரிந்துரையை ஏற்ற ஆட்சியா் சரண்ராஜை குண்டா் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். இதற்கான நகலை வேலூா் மத்திய சிறையில் உள்ள சரண்ராஜிடம் போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் பிரபு வழங்கினாா்.