விழுப்புரம், கள்ளக்குறிச்சி:மேலும் 69 பேருக்கு கரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கும் கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.


விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கும் கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை கரோனா தொற்றால் 13,498 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். இவா்களில், ஏற்கெனவே சிகிச்சைப் பலனின்றி 106 போ் உயிரிழந்தனா். திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில், 45 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,544 ஆக அதிகரித்துள்ளது. 50 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதன் கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 12,983-ஆக உயா்ந்துள்ளது. மாவட்டம் முழுவதும் 455 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
கள்ளக்குறிச்சியில் 24 போ் பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,170 ஆக உயா்ந்தது. இதுவரை 9,827 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். 241 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 102 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...