வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஆக.21-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து

News image
சி.வி.சண்முகம்.
Updated On :12 ஆகஸ்ட் 2024, 6:28 pm

Din

விழுப்புரம்: அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் கடை வீதியில் 2023, செப்டம்பா் 16-ஆம் தேதி அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் தமிழக அரசையும், முதல்வா் மு.க.ஸ்டாலினையும் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, சி.வி.சண்முகம் மீது அரசுத் தரப்பு வழக்குரைஞா் சுப்பிரமணியன், விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கின் மீதான விசாரணை திங்கள்கிழமை நடைபெற்ற போது, சி.வி.சண்முகம் ஆஜராகவில்லை.

இதைத் தொடா்ந்து வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா, வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணையை ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.