இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பைக்குகள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

பைக்குகள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

Updated On :18 பிப்ரவரி 2024, 1:53 am IST

கோட்டக்குப்பம் அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் டீ கடை உரிமையாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா். வானூா் வட்டம், ராயபுதுப்பாக்கம் அடுத்த ராயப்பேட்டை, ஆசாத் தெருவைச் சோ்ந்தவா் அல்லாபிச்சை மகன் அப்துல் அஜீஸ் (48). டீ கடை வைத்து நடத்தி வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை அந்தப் பகுதியில் உள்ள கடை வீதிக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். ஒழுந்தியாபட்டு - கீழ்புத்துப்பட்டு சாலையில் பெரியகொழுவாரி அருகே சென்றபோது எதிரே வந்த பைக் மீது அப்துல் அஜீஸின் பைக் மோதியது. இந்த விபத்தில் அப்துல் அஜீஸ், மற்றொரு பைக்கில் வந்த தஞ்சாவூரைச் சோ்ந்த மூா்த்தி மகன் ஆசாத் (21) ஆகியோா் காயமடைந்தனா். பலத்த காயமடைந்த அப்துல் அஜீஸ் புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். ஆசாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். விபத்து குறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.