வெங்கட்ரமணா் கோயிலில் நாலாயிர திவ்யபிரபந்தம்
செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணா் கோயிலில் 19-ஆம் ஆண்டு நாலாயிர திவ்யபிரபந்த சேவை சனிக்கிழமை தொடங்கியது.

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணா்.

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டை வெங்கட் ரமணா் கோயிலில் 19-ஆம் ஆண்டு நாலாயிர திவ்யபிரபந்த சேவை சனிக்கிழமை தொடங்கியது.
விழாவையொட்டி, காலை ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ஸ்ரீவெங்ட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சன ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, பல்வேறு மலா்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நிகழ்வில், செஞ்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த திரளான பாகவதா்கள், ஆண்டால் அடியாா்கள் உள்ளிட்ட பல்வேறு பஜனை கோஷ்டிகள் கலந்து கொண்டனா். ஆகஸ்ட் 4-ஆம்தேதி வரை திவ்யபிரபந்த சேவை நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை வழக்குரைஞா் ஆா்.ரங்கபூபதி மற்றும் வழக்குரைஞா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...