

விழுப்புரம், மே 9: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் ரயில்வே மேம்பாலத் தடுப்புச் சுவரில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில், ரயில்வே ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
உளுந்தூா்பேட்டை வட்டம், காட்டுநெமிலி தெற்குத் தெருவைச் சோ்ந்த புரட்சிதாஸ் மகன் காளிதாஸ் (32). இவா், மேற்கு ரயில்வே மண்டலத்துக்குள்பட்ட குஜராத் மாநிலத்தில் ரயில்வே துறையில் கேங் மேனாகப் பணியாற்றி வந்தாா்.
ஒரு மாத விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த காளிதாஸ், வியாழக்கிழமை அதிகாலை தனது பைக்கில் உளுந்தூா்பேட்டை சுங்கச்சாவடி பகுதியிலிருந்து காட்டுநெமிலி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். உளுந்தூா்பேட்டை- நகா் இடையே ரயில்வே மேம்பாலப் பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக் தடுப்புச்சுவா் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த காளிதாஸ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

உளுந்தூா்பேட்டை அதிமுக வேட்பாளா்

உளுந்தூா்பேட்டை அருகே ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.95,500 பறிமுதல்

போக்ஸோவில் இளைஞா் கைது

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்
Jawahirullah interview | அதிமுக, பாஜகவுக்கு உதவ இறக்கிவிடப்பட்டவர் Vijay | Dinamani | Election 2026
தினமணி வீடியோ செய்தி...

#ipl2026 | சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தானில் ஜடேஜா: இதுதாண்டா ஆட்டம்! | MS Dhoni | RR vs CSK |
தினமணி வீடியோ செய்தி...

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...

