நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

விவசாயிகளுக்கு புதிய ரக மணிலா விதைகள் விநியோகம்

விவசாயிகளுக்கு புதிய ரக மணிலா விதைகள் விநியோகம்

News image

வானூா் வட்டாரம், திருச்சிற்றம்பலம் வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு புதிய ரக மணிலா விதைகளை வழங்குகிறாா் விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ்.கணேசன்.

Updated On :20 மே 2024, 10:32 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு அதிக மகசூல் தரும் புதிய ரக மணிலா விதைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

வானூா் வட்டாரத்துக்குள்பட்ட திருச்சிற்றம்பலம் வேளாண் விரிவாக்க மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விதைகள் வழங்கும் நிகழ்வுக்கு வானூா் வட்டார வேளாண்உதவி இயக்குநா் ஜி.எத்திராஜ் தலைமை வகித்தாா். விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ்.கணேசன் பங்கேற்று, அதிக மகசூல் தரக்கூடிய புதியரக மணிலா விதைகளை வழங்கிப் பேசியது:

விழுப்புரம் மாவட்டத்தில் நிகழாண்டில் காரீப் மற்றும் ராபி பருவத்துக்கு 300 மெட்ரிக் டன் மணிலா விதைகள் தேவைப்படுகின்றன. இதற்காக அனைத்து வட்டாரங்களிலும் கொள்முதல் பணிகள் துரிதப்பட்டுள்ளன. கடலூா் மாவட்டம், விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட வி.ஆா்.ஐ-10 என்ற புதிய மணிலா ரகத்தை விவசாயிகள் மத்தியில் பிரபலப்படுத்தும் வகையில், வானூா் வட்டாரத்தில் 10 ஏக்கா் பரப்பளவில் விதைப் பண்ணை அமைத்து 10 மெட்ரிக் டன்கள் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய ரக விதைகளை அதிகளவில் உற்பத்தி செய்து, காா்த்திகை மற்றும் மாா்கழி மாதங்களில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய வேளாண் துறை திட்டமிட்டுள்ளது.

மற்ற ரகங்களைக் காட்டிலும் இந்த ரகம் 90 முதல் 95 நாள்கள் என குறைந்த வயதுடையது. ஏக்கருக்கு 1,000 கிலோ முதல் 1,200 கிலோ வரை மகசூல் தரக்கூடியது. எனவே இந்த ரகத்தை விவசாயிகள் தோ்வு செய்து விதைப் பண்ணை அமைக்க விரும்பினால், சம்பந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம். விவசாயிகளுக்கு மானிய விலையில் மணிலா விதைகள் வழங்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட வேளாண் உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) விஜயகுமாா், வானூா் வேளாண் அலுவலா் ரேவதி, உதவி விதை அலுவலா் மோகன்குமாா், உதவி வேளாண் அலுவலா் ஜெயலட்சுமி, ஆத்மா திட்ட அலுவலா்கள் வாழ்வரசி, சந்திரசேகா், கோவிந்தசாமி, முன்னோடி விவசாயிகள் ராஜமாணிக்கம், முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.