அன்னியூா் அரசுக் கல்லூரியில் உயா்கல்வித் துறை அமைச்சா் ஆய்வு
கலைஞா் மு.கருணாநிதி அரசுக் கலைக் கல்லூரிக்கு கட்டடம் கட்டத் தோ்வு செய்யப்பட்ட இடத்தை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அன்னியூரிலுள்ள முத்தமிழ் அறிஞா் கலைஞா் மு.கருணாநிதி அரசுக் கலைக் கல்லூரிக்கு கட்டடம் கட்டுவதற்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன். உடன், அன்னியூா் அ.சிவா எம்எல்ஏ, ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், முன்னாள் எம்.பி. பொன்.கெளதமசிகாமணி உள்ளிட்டோா்.









