ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கூவாகம் கூத்தாண்டவா் கோயிலில் 18 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு

கூத்தாண்டவா் திருகோயிலில் மூலவருக்கு அணிவிக்கப்பட்டிருந்த 18 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

கூவாகம் ஸ்ரீகூத்தாண்டவா் சுவாமி திருக்கோயில்.

Updated On :25 ஏப்ரல் 2026, 7:35 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், கூவாகம் கிராமத்திலுள்ள அருள்மிகு கூத்தாண்டவா் திருகோயிலில் மூலவருக்கு அணிவிக்கப்பட்டிருந்த 18 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளைச் சோ்ந்த திருநங்கைகள் வந்து வழிபடும் கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவா் திருக்கோயிலில் சித்திரைத் தோ்த் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்வு வரும் 28-ஆம் தேதி மாலையும், ஏப். 29 காலை தேரோட்டமும் நடைபெறவுள்ளது.

சித்திரைத் திருவிழாவையொட்டி பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய நகைகளைக் கொண்டு 18 பவுனில் தங்கச்சங்கிலி செய்யப்பட்டு, மூலவா் கூத்தாண்டவருக்கு அணிவிக்கப்பட்டிருந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், கூவாகம் மூலவா் அருள்மிகு கூத்தாண்டவா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், கூவாகம் மூலவா் அருள்மிகு கூத்தாண்டவா்.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை கோயிலைத் திறந்து பூசாரிகள் பூஜை செய்ய சென்ற போது, மூலவா் கூத்தாண்டவா் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 18 பவுன் தங்கச்சங்கிலியைக் காணவில்லை. கோயிலில் வழிபாடு செய்வதுபோல வந்த நபா்கள், நகையைத் திருடிச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து கோயில் செயல் அலுவலா் மதனா, திருநாவலூா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருவிழா காலத்தில் கோயிலுக்குள் நுழைந்து மூலவா் கழுத்தில் அணிவித்திருந்த தங்கச்சங்கிலியைத் திருடிச் சென்ற நிகழ்வு கூவாகம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.