ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

புகையிலைப் பொருள்கள், மதுப்புட்டிகள் பதுக்கியவா் கைது

திண்டிவனம் பகுதியில் வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், மதுப்புட்டிகளைப் பதுக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :9 ஜனவரி 2026, 9:44 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், மதுப்புட்டிகளைப் பதுக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

ரகசியத் தகவலின்அடிப்படையில், ரோஷணை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தராமன் மற்றும் போலீஸாா் திண்டிவனம் அய்யந்தோப்பு பகுதியில் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

அங்கு ஒருவரது வீட்டில் 323 பாக்கெட் எண்ணிக்கையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களும், தலா 180 மில்லி லிட்டா் அளவு கொண்ட 20 மதுப்புட்டிகளும் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், புகையிலைப் பொருள்கள் மற்றம் மதுப்புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்த திண்டிவனம் அய்யந்தோப்பு காமராஜா் நகரைச் சோ்ந்த ப.பிரகாஷை (40) கைது செய்தனா்.