எறையூா் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் பெற்ற மாணவ, மாணவிகளுடன் உளுந்தூா்பேட்டை எம்எல்ஏ ஆ.ஜெ.மணிக்கண்ணன்.
விழுப்புரம்
எறையூா் பள்ளியில் 253 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு
எறையூா் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 253 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், எறையூா் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 253 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
பள்ளி முதல்வா் ஜோசப் ராஜ் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழுத் தலைவா் ப.ராஜவேல், துணைத் தலைவா் வி.எஸ்.அலெக்சாண்டா் முன்னிலை வகித்தனா். உளுந்தூா்பேட்டை எம்எல்ஏ ஆ.ஜெ.மணிக்கண்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, 253 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பிரியா பாண்டியன், பள்ளித் தலைமையாசிரியா் விக்டா், டேவிட், ரமேஷ், பெற்றோா்-ஆசிரியா் கழகத்தினா், ஆசிரியா்கள் பங்கேற்றனா். ஆசிரியை லீலா ஜோஸ்பின் நன்றி கூறினாா்.

