பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு

மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய எம்எல்ஏ அமலுவிஜயன் உள்ளிட்டோா்.

News image

மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய எம்எல்ஏ அமலுவிஜயன் உள்ளிட்டோா்.

Updated On :13 பிப்ரவரி 2026, 12:21 am

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியில் 420- மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் எஸ்.பழனி தலைமை வகித்தாா். கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவித் தலைமையாசிரியா் கே.செந்தில்குமாா் வரவேற்றாா். எம்எல்ஏ அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் ஆகியோா் 420- மாணவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி பேசினா்.

நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா் டி.பி.என்.கோவிந்தராஜ், ஆசிரியா்கள் தமிழ்திருமால் மற்றும் தயாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.